games

img

உலகக்கோப்பை கால்பந்து 2022

22-வது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது வீரர்கள் அறிவிப்பு, கத்தா ரில் தரையிறங்குதல் என்ற நிகழ்வு களில் உலகக்கோப்பையில் கள மிறங்கும் நாடுகள் பிஸியாக உள்ள  நிலையில், ஐரோப்பாவில் கத்தார் உலகக்கோப்பைக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது.  5 முக்கியமான காரணங்களை கொண்டு கத்தார் புறக்கணிப்பு 2022 (பாய்காட் கத்தார் 2022) என்ற பெயரில் உலகக்கோப்பைக்கு எதிராக இயக்கமும் முளைத்து ஐரோப்பாவில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த “பாய்காட் கத்தார் 2022” இயக்கம் ஜனநாய கம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், எல்ஜிபிடிகியூ, பெண்களின் உரிமைகள் மற்றும்  சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில் உள்ள நடைமுறை விதிமீறலை எதிர்த்து போராடி வருகிறது.

5 விதிமீறலின் விரிவாக்கம் 1. ஜனநாயகம் - உள்ளூர் மக்களுக்கு  கடுமையான விதிகள் (சுதந்திரமில்லா சூழல்) 2. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் - அனுமதி கிடையாது. சொந்த நாட்டை போல அங்கு வேலைப்பார்த்தாலும் பொதுவான, சுதந்திரமான அனுமதி கிடையாது.  3. எல்ஜிபிடிகியூ - தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் தண்டனை 4. பெண்களின் உரிமைகள் - அரபு பழக்க வழக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் 5. சுற்றுச்சூழல் - குளிரூட்டப்பட்ட மைதானங்களில் போட்டியை நடத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் உலகக்கோப்பை என்ற உலகின் தொடரை நடத்தினாலும் கத்தார் நாடு தனது இறையாண்மையில் சமரசம் செய்ய மறுத்து வருவதால் ஐரோப்பாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.