புரோ கபடி 2023 அணிகளின் செயல்பாடு
10-ஆவது சீசன் புரோ கபடி தொடரில் தற்பொழுது 3-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற 26 லீக் ஆட்டங்கள் முடிவில் அணிகளின் செயல்பாடு பற்றி காணலாம்: வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணிகள் நடப்பு சீசன் புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் விளை யாடி வரும் நிலையில், பெங்கால் வாரி யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், ஹரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் ஆகிய 5 அணிகள் மட்டுமே வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இதில் பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் சொதப்பலின்றி அசத்தலாக விளையாடி வருவதால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் மிக குறைந்த அளவிலான லீக் (3) ஆட்டங் களில் மட்டுமே விளையாடியுள்ளதால் அந்த அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கி உள்ளது. சுமாரான பார்ம் பெங்களூரு புல்ஸ், உ.பி. யோதாஸ் யு மும்பா, தபாங் தில்லி ஆகிய 4 அணி கள் சூப்பர் பார்மில் நன்றாக விளையாடி னாலும், கடைசி நேர சொதப்பல் மற்றும் பதற்ற மேலாண்மையால் வெற்றியை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. திணறல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி படியில் காலடி வைக்காமல் கடுமை யாக திணறி வருகின்றன. ஜெய்ப்பூர் அணியில் ராகுல் சவுதாரி, அஜித் குமார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருந்தும், 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றியை ருசித்து புள்ளிப்பட்டியலில் 11-ஆவது இடத்தில் உள்ளது. அதே போல இந்திய அணியின் கேப்டன் பவன் செராவத் விளையாடி வரும் தெலுங்கு டைட்ட ன்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை பெறா மல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புரோ கபடி 2023
பெங்கால் வாரியர்ஸ் - உ.பி. யோதாஸ்
(29-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
புனேரி பால்டன் - தபாங் தில்லி
(30-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
மும்பையா? சென்னையா? தில்லியா?
புயலை கிளப்பும் ரோஹித் சர்மா
ஐபிஎல் தொடரில் 10 ஆண்டு களுக்கும் மேலாக மும்பை அணியின் கேப்டனாக இருந்து 5 முறை கோப்பையை பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து துரத்தப்பட்டு, குஜராத் அணி யின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நிய மித்துள்ளது மும்பை அணி நிர்வாகம். இதற்கு மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அணியின் கொடியை எரித்து, சமூகவலைத் தளங்களில் அன்பாலோ வேலையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ரோஹித் சர்மாவை எங்கள் அணிக்கு கொடுக்க வேண்டும் என தில்லி அணி நிர்வாகம் மறைமுக பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. அதே போல ரோஹித் சர்மா மனைவி ரித்திகா சென்னை அணி யின் மஞ்சள் நிற சிம்பலை திடீரென பதிவிட்டுள்ளார். மேலும் சில ஊட கங்கள் ரோஹித் சர்மா சென்னை அணி யில் தோனியுடன் விளையாட வாய்ப்புள் ளது என தகவல் வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு சம்பவங்களால் ஐபிஎல் உலகில் தனி ஆளாய் ரோஹித் சர்மா புயலை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.