திருவண்ணாமலையில்
கலைஞர் கருணாநிதி அரசு
கலைக்கல்லூரியின் முதல்வர்
இட ஒதுக்கீட்டை காற்றில்
பறக்க விட்டு அவல் பொரியாக
சீட்டுகளை ஏலம் விடுகிறார்..
பல கட்சியினரை துணைக்கு
கொண்டு கல்லா கட்டுகிறார்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட இதர
அனைத்து தலைவர்களையும்
வீட்டில் சென்று பார்க்கிறார்.
ஒரு புதுமையான கூட்டணியில்
அனைவரும் சேர்ந்து கொண்டு
கல்லாபெட்டியை பங்கீடு செய்ய,
மார்க்சிஸ்ட் கட்சி களத்தில்
இறங்கி ஒரு வாரமாக பல்வேறு
போராட்டங்களை நடத்தியது..
சிபிஐ, விசிக, மாணவர்,வாலிபர்
அமைப்புகளும் இணைந்து நிற்க,
இதோ.., கோரிக்கையில்
வெற்றி பெற்றுள்ளோம்..
இட ஒதுக்கீடு அமலாக்கப்படும்
எனும் வாக்குறுதியோடு,
முதல்வர் மீதான நடவடிக்கையும்
உறுதி செய்யப்பட்டுள்ளது..
எல்லா மாடல்களையும் விட
கம்யூனிஸ்டுகளின்
போராட்ட மாடலே எப்போதும்
பிரச்னைக்கு தீர்வு...!!!!