facebook-round

img

குருமூர்த்தியின் அயோக்கியத்தனம் - பேரா.அருணன்

பெண்களை இழிவுபடுத்தி ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி பேசியதற்கு அவரை கண்டித்திருந்தார் தோழர் கே பி. அதனால் ஆத்திரம் கொண்டவர் "பெண்களை பொதுவேசியாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுசொத்தாக்குவதுதான் கம்யூனிசம்"  என்று மார்க்ஸ் கூறியிருப்பதாக ஓர் அவதூறை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதற்கு  ஆதாரமாக அவர் கொடுத்துள்ளை லிங்கை படித்தாலோ அது இந்த பாணி கம்யூனிசத்தை மார்க்ஸ் எதிர்த்திருப்பதாக உள்ளது! குருமூர்த்தியின் அயோக்கியத்தனத்திற்கு அளவேயில்லை. கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதினார்கள்: "தற்போதய உற்பத்தி முறை ஒழிவது அதிலிருந்து பிறந்த பொது மற்றும் தனி 
விபச்சாரம் எனப்பட்ட பெண்களை பொதுவாக வைத்திருப்பதையும் ஒழிக்கும்". ஆம் மெய்யான கம்யூனிசத்தில்தான் சகலவிதமான விபச்சாரங்களும் ஒழிக்கப்படும்.  பெண்களை சொத்தாக பாவிக்காமல் சக ஜீவராசியாக பார்க்கிற நிலை உருவாகும். இத்தகைய மகத்தான கம்யூனிசத்தைதான் கொச்சைபடுத்தியிருக்கிறார் குருமூர்த்தி. இவரது முன்னோர்கள்தாம் தாசி முறை, பொட்டுகட்டுதல் எனும் பொதுவேசித்தனத்திற்கு புனிதம் சேர்த்தவர்கள் எனும் வரலாறை மறந்து போனார். அதுசரி, பாஜகவில்  உள்ள சகோதரிகள் தமிழிசை, வானதி போன்றோரை கேட்கிறேன் நீங்கள் குருமூர்த்தியின் அந்த அசிங்க கருத்தை ஏற்கிறீர்களா? ஏற்றால் நீங்கள் அந்த 30% ல் வருவீர்களா 
அல்லது 70% வருவீர்களா எனும் கேள்வி வரும் என்பதை யோசித்து கொள்ளுங்கள்.

-Ramalingam Kathiresan

Ramalingam Kathiresan