"கடந்த 6 ஆண்டுகளில் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மார்ச் 6, 2023 அன்று கூறினார்.
ஆனால், மாநிலத்தில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 398 விவசாயிகளும் 731 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதீய ஜனதா கட்சி மார்ச் 2017 ல் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து 2022 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சமீபத்திய தரவுகள் கிடைத்த 2017 மற்றும் 2021 க்கு இடையில், உத்தரப் பிரதேசத்தில் 398 விவசாயிகள் தற்கொலைகள் பதிவாகியுள்ளன. ஆண்கள்(82%) பெண்கள்(18%) மற்றும் 731 விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் ஆண்கள் (92%) பெண்கள்(8%) என்றுதேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (NCRB) ஆண்டு அறிக்கை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறது.
மரணத்தை கூட மறைக்கும் மர்ம யோகிகள் மக்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.
அ.பாக்கியம்