facebook-round

img

சிவப்பு பூக்கள் விரைவில் மலரும் நாளொன்று வருமே நம்புங்கள்!

வாழும் நிலமும்
குடி உரிமையும்
எங்கள்
ஜீவ ஆதாரம்!

இந்திய நாடும்
வங்க கடலும்
எங்களை
காக்கும் கூடாரம்!

அதிகாரத் திமிரில்
அதிகாரத் திமிரில்
ஆவணம் கேட்கும்
காவிகளே!

இது எங்கள் நாடென்று
இரத்தத்தில் உள்ளது
வெட்டிப் பாருங்கள்
பாவிகளே!

அடக்குமுறையும்
ஒடுக்குமுறையும்
தெறித்து வீழும்
பாருங்கள்!

சிவப்பு பூக்கள்
விரைவில் மலரும்
நாளொன்று வருமே
நம்புங்கள்!

ஒருமுறை தானே
இறப்பு நேரும்
அஞ்ச மாட்டோம்
எதிரிகளே!

தூக்கு கயிறோ
கொடுமை சிறையோ
துணிந்து நடப்போம்
தோழர்களே!

மனு தர்மம் போற்றி
மக்களை பிரித்து
சுரண்டும் நீங்கள்
அட்டைகள் தான்!

மரணம் வரையில்
இங்கே வாழ்வோம்
திப்பு சுல்தான்
பிள்ளைகள் யாம்!

அமைதியின் வழியில் வென்றிடுவோம்
அமைதியின் வழியில் வென்றிடுவோம்

- தோழர் சுபாஷ், சூலூர், கோவை.
தந்தை பெரியார் திராவிடர் கழகம்