கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது எனக் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் 191 மாணவர்கள் கொரோனா நோய் தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்,
கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன்.
சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது.
இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக. என்று தெரிவித்துள்ளார்.