election2021

img

மோடியின் சில்லரை வியாபாரமும்... மொத்த வியாபாரமும்....

பாஜக மற்ற மாநிலங்களில் சில கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர் களை சில்லரையாக பேசி வாங்கினார்கள். தமிழகத்தில் அதிமுக கட்சியை மொத்தமாக வாங்கிவிட்டார்கள்.எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும்போது கூட இந்தியில் பேசுகின்றனர். ஒன்பதை அமுக்கினால் மட்டுமே தமிழ் மொழி கேட்கிறது. தமிழகத்தில் தமிழ் தானே முதலில் வர வேண்டும். இந்தி மூலமாக அனைத்து மொழி களையும் அடக்கிவிட முடியும் என நினைக்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளம் மொழி.

வெவ்வேறு மதத்தை, சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் நம்மை பிணைப்பதுமொழி. பேசாத மொழி, எழுதாத மொழி, ஆட்சி செய்யாத மொழி அழிந்துவிடும். ஓராண்டிற்கு 100 மொழிகள் அழிந்து வருகின்றன.வடநாடு கலவர பூமியாக மாறிவிட்டது. அங்கெல்லாம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அமைதியாக வாழ முடியாது. நம்மைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் ஒன்று தான். பாஜகவை 20 இடங்களிலும் தோற்கடிக்க வேண்டும். காரைக்குடியில் பாஜக படுதோல்வி அடைய வேண்டும்,” 

 காரைக்குடியை அடுத்துள்ள கல்லலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் பேசியதிலிருந்து...
 

;