election-2019

img

அடிக்கடி நினைவில் வரும் அதிசய மனிதர்

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்தது குறித்து இன்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முயற்சி தான் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.பல வருடங்களுக்கு முன்பு தென் தமிழக மக்களின் நலனுக்காக மதுரை மாநகரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் உரக்கக் குரல் எழுப்பியவர் மதுரையின் முன்னாள் மக்களவை உறுப்பினர் பி. மோகன். அவரை மறந்துவிட்டு மதுரையில் எய்ம்ஸ் பற்றிப் பேச முடியாது. கடைசி வரை எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்த ஒரு அதிசய மனிதர் தோழர் மோகன். ஒரு முறை 10 பத்திரிகையாளர்கள் அவர் வீட்டுக்கு ஒரு பேட்டிக்காகச் சென்றபோது, அத்தனை பேரையும் உட்கார வைக்க அவர் வீட்டில் போதிய இருக்கை வசதி இல்லாததால், மிகுந்த தயக்கத்துடன் பாய் ஒன்றை எடுத்துப்போட்டு தரையில் அமர வைத்து, தானும் கீழே உட்கார்ந்து கொண்டார். அனைத்துப்பகுதி மக்களும் எளிதில் அணுகக்கூடிய எம்.பி.யாக இருந்த மோகன், மதுரையின் முன்னேற்றத்திற்கென்று சத்தமில்லாமல் செய்துள்ள பணிகள் ஏராளம். இப்போது தேர்தல் நடக்கும்போது, அடிக்கடி நினைவில் வருகிறார் மோகன்.


எம். செல்வராஜ், குருவிக்காரன் சாலை, மதுரை.

(தி ஹிண்டு ஆங்கில நாளிதழ் 09.04.2019-ல் இடம்பெற்றுள்ள வாசகர் கடிதம்) 

;