election-2019

img

மதுரவாயல் வட்டங்களில் வாக்கு சேகரித்தார் டி.ஆர்.பாலு--ஆர்.டி.சேகர் தேர்தல் பரப்புரை

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மதுரவாயல் பகுதி 148, 149, 151, 152, 153, 154, 155 ஆகிய வட்டங்களில் வாக்கு சேகரித்தார். மதுரவாயல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமானக.பீம்ராவ், பகுதிச் செயலாளர்கள் காரம்பாக்கம் க.கணபதி (திமுக), வி.தாமஸ் (சிபிஎம்) உள்ளிட்டு தோழமைக் கட்சியினர் கலந்து கொண்டனர்.


பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், இந்திராநகரில் வெள்ளியன்று (ஏப்.5) பிரச்சாரத்தி துவக்கி, சாஸ்திரிநகர் 1 முதல் 9, எஸ்.ஏ.காலனி 1 முதல் 9 தெருக்கள், பாரதிநகர், சர்மாநகர், காந்திநகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். திமுக பகுதிச் செயலாளர் ஜெயராமன், சிபிஎம் பகுதிச் செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் ஜாகிர்உசேன், எஸ்.ஏ.வெற்றிராஜன், பிரமிளா, சந்தியாகு, சுந்தரய்யா, கணேசன், நயினார்முகமது, முத்து,சந்தானம், கல்தூண் ரவி, உஷா (விசிக), ஏ.சுப்பிரமணி (சிபிஐ), அமீது (முஸ்லீம்லீக்), கவுசிக்(தமுமுக) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


;