election-2019

img

ஆட்டு தொட்டியை நவீனப்படுத்துவேன்: வீ.கலாநிதி வாக்குறுதி

சென்னை.ஏப்.5-


திரு.வி.க. நகர் தொகுதிக்குட்பட்ட ஆட்டு தொட்டியை நவீனப்படுத்தி மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பேன் என வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் வீ.கலாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்தார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் கலாநிதிவீராசாமி திரு.வி.க நகர் தொகுதி முழுவதும் வெள்ளியன்று (ஏப்.5) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நெல்வயல்சாலை, பெரம்பூர் மார்க்கெட், டெப்போ, கன்னிகாபுரம், டிகாஸ்டர்சாலை, வஉசி நகர், அம்பேத்கர்நகர், பாரதிசாலை, காந்திநகர், கொசப்பேட்டை, ஸ்டேர்ஹன்ஸ் சாலை, பிரிக்ளின் சாலை, செல்லப்பதெரு உள்ளிட்ட 70, 72, 73, 75, 76 ஆகிய வட்டங்களில் பிரச்சாரம் நடைபெற்றது.தாயகம் கவி எம்எல்ஏ, வடக்கு பகுதி செயலாளர் தமிழ்வேந்தன், தெற்கு பகுதி செயலாளர் சாமிக்கண்ணு, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், முருகேஷ், கிருஷ்ணன், இளங்கோ, எம்.சுந்தரமூர்த்தி, மணிநாத், இருதயராஜ், பாலமுருகன், சுப்பிரமணி, விசிக சார்பில் ராஜி, ராசய்யா உட்பட பலர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.‘மக்களின் குடிநீர் பிரச்சனையை முற்றிலுமாக தீர்க்கப்படும், பராமரிப்பின்றி இருக்கும் பெரம்பூர் பேருந்து நிலையம்சீரமைக்கப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படும், பெரம்பூர் ரயில்நிலையம் ஜமாலியா பகுதியில் உள்ள 4வது பிளாட்பாரத்தில் டிக்கெட் கவுண்டர் அமைத்துத்தரப்படும், 71வது வட்டத்தில் மூடப்பட்ட ஆரம்பசுகாதார நிலையத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன்’ என பிரச்சாரத்தில் வேட்பாளர் கலாநிதி வாக்குறுதி அளித்தார்.

;