election-2019

பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய வேட்பாளர்

புதுதில்லி, ஏப்.19-கேரள மாநிலத்தில் கண்ணூர் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் சுதாகரன் என்பவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவரை எதிர்த்துப் போட்டியிடும் இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் பி.கே. ஸ்ரீமதி டீச்சருக்கு எதிராக இழிவாகப் பேசியது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு எதிராகவும் பேசியுள்ளார். பெண்கள் நாடாளுமன்றத்திற்கே போகக் கூடாது என்றும் எனவே பெண்களை ஆதரித்து எவரும் தங்கள் வாக்குகளை வீணடித்திட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். இவர் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவர் பெண்களுக்கு எதிராகப் பேசியுள்ளதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. நம் நாட்டின் அரசமைப்புச் சட்டத்திற்குமரியாதை தராத, பாலின சமத்துவத்தை எதிர்த்திடும்இத்தகைய பேர்வழிகளை தேர்தலில் முற்றிலுமாக முறியடித்திட வேண்டும் என்றும் மாதர் சங்க பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே கேட்டுக்கொண்டுள்ளார்.(ந.நி.)

;