election-2019

img

வாக்கு இயந்திரம் உள்ள மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா கேமராக்கள் இயங்கவில்லை என அரசியல் கட்சி முகவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

 

கோவை நாடாளுமன்றத்திற்குட்பட்ட ஆறு சட்ட மன்ற தொகுதிகளில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு பதிவு நடைபெற்றது. பின்னர், பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு வாக்கு பதிவு இயந்திரங்கய் உள்ள மையத்தில் போடப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 144 கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இருந்து பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை என அரசியல் கட்சி முகவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3 மணி நேரத்திற்கும் மேலாக கண்காணிப்பு கேமராக்களை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

;