election-2019

img

பள்ளியில் வெள்ளிக் கிழமை மாதிரி நாடாளுமன்றத் தேர்தல்

தஞ்சாவூர், ஏப்.6-

வீரியன்கோட்டை ராஜராஜன் பள்ளியில் வெள்ளிக் கிழமை மாதிரி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் முன்னிலையில் இந்த மாதிரி தேர்தல் நடைபெற்றது. தேர்தல்அலுவலர்களாக ஆசிரியர்கள் செ.பிரகாஷ், த.தங்கபாண்டியன், வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் அ.பகாவுதீன், உ.நித்தியா, மா.நிர்மலா செயல் பட்டனர். வேட்பாளர்களாக ஆசிரியர்கள் த.பாலமுருகன், க.பாலமுருகன் போட்டியிட்டனர். மாணவர்கள் மிகுந்தஆர்வத்தோடு தங்களது வாக்கை பதிவு செய்தனர். வாக்குப் பதிவு முடிவில் த.பாலமுருகன் 540 வாக்குகளும், அவரை எதிர்த்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட க.பாலமுருகன் 508 வாக்குகளும் பெற்றனர். 32 வாக்குகள் கூடுதலாகப் பெற்று த.பாலமுருகன் வெற்றிபெற்றார். 

;