election-2019

img

மதச்சார்பின்மையை பாதுகாப்போம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வியாழனன்று வெளியிடப்பட்டது. தலைநகர் புதுதில்லியின் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான அஜாய் பவனில் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா, தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர், தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா, தில்லி மாநில செயலாளர் பேராசிரியர் தினேஷ் வார்ஷ்னே ஆகியோர் இதனை வெளியிட்டார்கள். தேர்தல் அறிக்கையில், நாட்டைப் பாதுகாத்திட, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திட, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்களிக்குமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.


(ந.நி.)

;