election-2019

பாஜக, அதிமுகவிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்

பெரம்பலூர், ஏப்.5-பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சிவேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து,பெரம்பலூர் தேரடி வீதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,திமுக கூட்டணி கொள்கை கூட்டணி,அதிமுக கூட்டணியானது கொள்ளை கூட்டணி. திமுக தலைமையிலான கூட்டணி போராட்டத்தில் பூத்தது. மக்கள் பிரச்சனைக்காகவும், காவிரி பிரச்சனைக்காகவும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோம். கருணாநிதி ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.ஆனால், தற்போது எவ்வித அரசு கல்லூரியும் தொடங்கப்படவில்லை. மத்தியில் ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி.பாஜக, அதிமுகவிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் என்பதே இத்தேர்தலின் சாராம்சமாகும். ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம் விரைவில் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஊழல் மிகுந்து காணப்படும் மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்குஅனுப்பும் தேர்தல் இது என்றார்.கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக ராஜேந்திரன், முகுந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீ.ஞானசேகரன், விசிக தமிழ்மாணிக்கம், கட்டுமானத் தொழிலாளர் சங்க ஈஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;