education

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு... சென்னையில் மட்டுமா?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் உயர்ந்ததும், முதன்மையானதுமான “குரூப் 1” தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று அடிப்படைகளில் நடைபெறும். 
68 காலியிடங்களை கொண்டுள்ள நடப்பாண்டிற்கான “குரூப் 1 தேர்வு” ஏப்ரல் 5-ஆம் தேதி (முதல்நிலை) தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் காரணமாக சமீபத்தில் நிறைவு பெற்ற கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு மற்றும் தொல்லியல் அலுவலர் தேர்வு ஆகிய இரண்டு தேர்வும் சென்னையில் நடைபெற்ற நிலையில், “குரூப் 1” தேர்வும் சென்னையில் மட்டும் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.  

சர்ச்சைக்கு காரணம்
குரூப் 1 முதல்நிலை தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும். முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெறும். ஆனால் தற்போது முதல்நிலை தேர்வு சென்னையில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.