education

img

குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

      டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி ஆணையம் தெரிவித்துள்ளது.


 கடந்த 2022 ஜூலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் தேர்வர்கள் கலந்துகொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இதுவரையில் வெளியாகாததால் தேர்வர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின்னர் தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்தது. 

 தற்போது குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 7,381 இல் இருந்து 3000 வரை அதிகரித்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

;