தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’-க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 475
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019