economics

img

அமெரிக்க வங்கிகள் வாங்கிய அடியால் அரண்டு போன ஆர்பிஐ!

புதுதில்லி, ஏப்.8- சர்வதேச பொருளாதார மந்தநிலை, டால ருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு  தொடர்ந்து 82 ரூபாயாகவே நீடிப்பது, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ‘ஓபெக்’ நாடுகள் எடுத்துள்ள முடிவு, தொடரும் பண வீக்க அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகிய வற்றுக்கு இடையேயும் ரெப்போ வட்டி விகி தத்தை உயர்த்துவதில்லை என ரிசர்வ் வங்கி யின் நாணயக் கொள்கைக்குழு முடிவு செய்  துள்ளது. பெரும்பாலும் இது வரவேற்கத்தக்க முடிவு  என்றாலும், இதன் பின்னணியின் மக்கள் நலனோ, இதற்கு மேலும் மக்களை கசக்கிப்  பிழியக் கூடாது என்ற மோடி அரசின் நல் லெண்ணமெல்லாம் காரணம் கிடையாது. ரெப்போ விகித உயர்வால் அமெரிக்க வங்கி கள் வாங்கிய அடியே, வட்டியை உயர்த்தாமல்  ரிசர்வ் வங்கி அரண்டு ஒதுங்கிக் கொண்டதற்கு  காரணம் என்பது தெரியவந்துள்ளது. ஒருநாட்டின் மத்திய வங்கி, பிற வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்  களுக்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகி தம் (Repo Rate) எனப்படுகிறது. அதன்படி இந்தியாவின் மத்திய வங்கியான, இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ விகி தங்களை மாற்றியமைப்பது வழக்கம்.

அந்த வகையில், கொரோனாவின்போது மிக நீண்டகாலத்திற்கு 4 சதவிகிதம் என்ற அள விலேயே இருந்த ரெப்போ விகிதம், 2022 மே 4  அன்று 40 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்  பட்டது. அதைத்தொடர்ந்து, ஜூன் 8, ஆகஸ்ட் 5, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளிலும் ரெப்போ  விகிதம் தலா 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்  தப்பட்டன. இதேபோல 2022 டிசம்பர் 7 அன்று  35 அடிப்படைப் புள்ளிகளும், 2023 பிப்ரவரி 8 அன்று 25 புள்ளிகளும் ரெப்போ உயர்த்தப் பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த ரெப்போ விகிதம் 6.50 சதவிகிதம் என்ற அளவை எட்டி யது. இதனால், இந்தியாவில் சாமானியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் வாங்கிய வீட்டுக் கடன்,  வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகை (EMI) பெரும்  சுமையாக மாறின. இந்த வட்டி விகித அதி கரிப்பு மக்களைக் கசக்கிப் பிழிந்து வரு கிறது. இந்நிலையில், ஏப்ரல் 3 முதல் 6 வரை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்  கைக்குழு கூட்டத்தில் ரெப்போ விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளி யாகின. குறைந்தபட்சம் 25 அடிப்படைப் புள்ளி கள் அளவிற்கு இந்த உயர்வு இருக்கும் என்று  கூறப்பட்டது. பணவீக்கம் 6 சதவிகிதம் என்ற  அளவை விட்டு இறங்கும் வரை, வட்டி விகித  உயர்வு தவிர்க்க முடியாதது என்று ஒன்றிய அரசின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், கடந்த ஏப்ரல் 6 அன்று நாணயக்  கொள்கைக்குழு கூட்ட முடிவுகளை விளக்கி ஊடகங்களுக்கு பேட்டியளித்த இந்திய ரிசர்ச்  வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ  விகிதம் 6.50 சதவிகிதமாகவே தொடரும் என்று  அறிவித்தார். பணவீக்கமானது, 2023 ஜனவரியில் 6.52  சதவிகிதமாகவும், பிப்ரவரியில் 6.44 சதவிகித மாகவும் இருந்தது என்று கூறிய அவர், நடப்பு  நிதியாண்டில் இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள்  அதிகமாக இருந்தும் வட்டி உயர்த்தப்பட வில்லை என்று கூறினார். ஏதோ நரேந்திர மோடி அரசும், ரிசர்வ்  வங்கியும் மக்கள் மீது கொண்ட அக்கறை கார ணமாகவே வட்டியை உயர்த்தவில்லை என்  பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி னார். உண்மை அதுவல்ல. இதற்கு மேல்  ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் எதிர்மறை  விளைவுகள் ஏற்படும் என்று கடந்த மாதமே பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இப்படித்தான் அமெரிக்க மத்திய வங்கி யான பெடரல் வங்கியும் தொடர்ந்து ரெப்போ  விகிதத்தை உயர்த்தியது. விளைவு, கடந்த  2 வாரங்களில் மட்டும் ‘சில்வர்கேட் கேபிடல்  கார்ப்பரேஷன்’, ‘சிலிக்கான் வேலி வங்கி’,  ‘சிக்னேச்சர் வங்கி’, ‘கிரெடிட் சூயிஸ் குரூப்’,  ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ என நான்கு அமெரிக்க வங்கி கள் திவாலாகிப் போகின. இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கும் பொருந்தும் என்று குறிப் பிட்டிருந்தனர்.

“அடுத்த 12 மாதங்களில் அமெரிக்கா பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள லாம் என்பது உலகப் பொருளாதார வல்லு நர்களின் கணிப்பாக உள்ளது. அமெரிக்கா வில்தானே என்று கூறிவிட்டு- இதனால் இந்தி யாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை- என்று ஒதுங்க முடியாது. 2008 உலக பொருளாதார மந்த நிலையிலிருந்து தப்பித்ததைப் போல, இப்போதும் தப்பிவிடலாம் என்று தப்புக்  கணக்கு போட்டுவிடக் கூடாது. 2025-க்குள் ‘5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா  மாறும்’ என்ற வெற்று ஜம்பங்களைக் கை விட்டு, அமெரிக்காவோடு பல்வேறு வணிக, ஏற்றுமதி - இறக்குமதி உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா விழிப்போடு இருக்க  வேண்டியது அவசியம்” என்றனர். ரெப்போ விகித உயர்வு மட்டுமே தீர்வெனக் கொள்ளா மல் வேலையின்மை, விலைவாசி உயர்வு என  உண்மையான பிரச்சனைகளின் மீது அரசு கவ னம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி னர். மாறாக, ரெப்போ விகித உயர்வுதான் தீர்வு  என ரிசர்வ் வங்கி கருதினால், அமெரிக்க வங்கி களைப் போல, இந்திய வங்கிகளும் திவால்  நிலைமையைத் நோக்கித் தள்ளப்படலாம் என்று எச்சரித்தனர். இந்தப் பின்னணியிலேயே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதம் 6.50 சதவிகிதமாகவே தொட ரும் என அறிவித்து, ஒதுங்கிக் கொண்டுள்ளார்.