தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-23 ஆம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.10 சதவிகிதத்திலிருந்து 8.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் உண்மையில் மோடி ஆட்சியில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி உயர்ந்துள்ளதா என்று முந்தைய ஆண்டுகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
கடந்த 2010-2011-ஆம் ஆண்டு காலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 9.50% ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் ஈ.பி.எஃப்-கான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டது. தற்போது 0.05% மட்டுமே உயர்த்தப்பட்டு 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2011-லிருந்து தற்போது வரை பறிபோன 1.35% வட்டி எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.