economics

img

தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ள பிரிட்டானியா நிறுவனம் 

இந்தியாவின் பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா, இந்த ஆண்டில் தனது தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.  

உக்ரைன் - ரஷ்யா போர் துவங்கிய காலத்திலிருந்து இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் உணவு பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் விலை அதிகப்படியாக உயர்ந்துள்ளது. இதோடு பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் விவசாயப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது வருகிறது. 

இந்நிலையில், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் பிரிட்டானியா தனது பிஸ்கட் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையை இந்த வருடம் 7 சதவீதம் வரை உயர்ந்த திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து பிரிட்டானிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருன் பெர்ரி கூறுகையில், முதலில் நாங்கள் பணவீக்க அளவீட்டை 3 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் உக்ரைன் போருக்குப்  பின்பு 8-9 சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார். 

வாடியா குரூப் கீழ் இயங்கி வரும் இந்த பிரிட்டானியா நிறுவனம், குட் டே, மேரி கோல்டு, டைகர் பிஸ்கட்டுகளுக்குப் பிரபலமானது. இந்நிறுவனம் பிஸ்கட்களைத் தாண்டி பிரெட், கேக் மற்றும் பால் சார்ந்த பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய்து வருகிறது.