செங்கல்பட்டு,நவ. 20- செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சி யம் பாக்கம், ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் சந்திர சேகர் (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது வீடு புதியதாக அமைக்கப்பட்ட 3-வது ரெயில்வே தண்ட வாளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. இந்த நிலையில் சனிக் கிழமை காலை வழக்கம் போல இவர் வெளியே செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நாகர் கோவில் இருந்து-தாம்பரம் நோக்கி வந்த விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார்.