செங்கல்பட்டு, ஜூன்5- போர்டு கார் ஆலைத் தொழி லாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது செங்கல்பட்டு மாவட்டம் மறை மலைநகர் தொழிற்பேட்டையில் போர்ட் சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது இத்தொழிற்சாலை ஜூன் 30ம் தேதி யோடு மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போர்டு நிர்வாகம் கடந்த ஒராண்டாக நிரந்தர தொழிற்சங்கத்திடம் 35 முறை பேச்சு நடத்தியது. இதில் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஊக்கத்தொகை ஓய்வூதியம் தரு வதற்கு நிர்வாகம் மறுத்துள்ள நிலையில் தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை ஆலைக்கு உள்ளே அனுமதிக்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் வெளியே இருந்தும் உள்ளிருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊழியர்கள் தங்களுக்கு முறையாக நியாயமாக கிடைக்கவேண்டிய பலன்கள் வழங்கப்படவேண்டும் என்று கேட்கின்றனர்.
என்னதான் நடக்கிறது?
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான போர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டு களாக பலவிதமான கார்களை உற்பத்தி செய்து வருகிறது. மறைமலை நகரில் உள்ள ஆலையில் ஆண்டுக்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் கூறுகிறது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு குறித்த தொழிற் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க போர்டு நிறுவனம் மறுத்து விட்டது. தற்போது பெற்ற ஆர்டர்க ளில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால், வருகின்ற ஜூன் மாதம் வரை ஆலை இயங்கும் என்று நிர்வாகம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை இதுவரை யாரும் வாங்க முன் வராத நிலை யில், குஜராத்தில் உள்ள போர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்குவது உறுதி யாகியுள்ளது. இந்நிலையில்தான் சென்னையில் உள்ள தொழிற்சாலை நிலை என்ன வென்று தெரியாத நிலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தொழிலாளர் துறை துணை ஆணை யர் தலைமையில் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வெளியில் வரு வதற்கும் தொழிலாளர் பணிக்கு செல்வதையும் தடுக்கப்போவதில்லை என்று நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
எஸ்.கண்ணன் பேட்டி
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் குறித்து சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்ணனிடம் கேட்ட போது, ஆலையை மூடப் போவதாக ஒரு வருடத்திற்கு முன்னரே அறி வித்தனர். வேறு எந்த நிர்வாகமும் ஆலையை வாங்க முன்வரவில்லை. ஆலையில் மின்சார வாகனங்கள் தயாரிக்க இருப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்தனர். இது ஏதும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை அறி விப்புகள் அனைத்தும் பெயரள விலேயே உள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் மற்றொரு ஆலையான குஜராத் மாநிலம் சனத் பகுதியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையில் வேலை உத்தர வாதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. பணியில் உள்ள தொழிலாளர்களுடன் சேர்த்தே ஆலையை டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. சென்னையில் உள்ள ஆலையின் ஊழியர்களின் எதிர்காலம் குறித்து நிர்வாகம் உறுதியாக தெரிவிக்க மறுக்கிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாடு அரசிடம் முறையாக அறிவிப்புகள் எதுவும் தெரிவிக்காமல் போர்டு நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது. தொழிற் சங்கத்துடன் முறையாக பேச்சு நடத்தி வருவதாக சட்டத்திற்கு புறம்பாக நிர்வாகம் அரசிடமும், தொழிலாளர் நலத் துறையிடமும் பொய் சொல்லியுள்ளது. எனவே அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட வழிகாட்ட வேண்டும், மேலும் போர்டு நிர்வாகம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கண்ணன் கூறினார்.
க.பார்த்திபன்