districts

செங்கல்பட்டு மாவட்டத்தில்   வாக்காளர் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு, நவ. 3 – செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வரும் 2023 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி  ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணி தற்போது நடைபெற்று  வருகிறது, ஜனவரியில்  18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம்7ல் பூர்த்தி செய்யவும், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழை மற்றும் முகவரி மாற்றம் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரே பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புவோர் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து. தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில். நவ 9 ஆம் தேதி முதல் வழங்கலாம், மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் 6பி ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு முகாமில் விண்ணப்பத்தினை நேரில்  வழங்கலாம், இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;