செங்கல்பட்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செங்கல்பட்டில் நேற்று முன்தினம் காவல்நிலைய வாசலில் அப்பு கார்த்திக் என்ற ரவுடி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து அவருடைய உறவினரான மகேஷ் என்பவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இதற்கு பின்னணியில் நான்கு நபர்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மாதவன் மற்றும் ஜெசிக்கா ஆகிய இருவரை கைது செய்தனர் . இதனையடுத்து இருங்குன்றம் பள்ளி என்ற பகுதியில் பதுங்கி இருந்த மற்ற இரண்டு கொலையாளிகள், தினேஷ் மற்றும் முகமது மொய்தீன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்யப் போவது அவர்கள் மீது வெடி குண்டு வீசியதால் காவல்துறையினர் தற்காப்புக்காக சுட்டுகொன்றதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை செங்கல்பட்டு கோட்டாட்சியர் உயிரிழந்த இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இதனை அடுத்து கோட்டாட்சியர் இரண்டு நபர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த இரண்டு நபர்களின் உடல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, குண்டு எந்த இடத்தில் பாய்ந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது. இருவர் உடலிலும் இடதுபுறம் மார்பு பகுதியில் இரண்டு இரண்டு குண்டுகள் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இருவரின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.