districts

img

சிங்கப்பெருமாள் கோவில் மேம்பால பணியை விரைந்து முடிக்ககோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூலை 14- சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் சிங்கப்பெருமாள் கோவில் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை விரைந்து முடித்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று (ஜூலை14) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங் குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல லட்சம் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கும், ரயில்வே கேட்டை கடப்பதற்கும் தைலாவரம் முதல் காட்டாங்குளத்தூர், சாமியார் கேட், பேரமனூர், மஹேந்திரா சிட்டி போன்ற பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டை கடந்துதான் வரமுடிகிறது, அதனால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பலநேரங்களில் அரை மணி நேரம் வரை மேலாக ரயில்வேகேட் அடைக்கப்படுவதால்,பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள்,  மாண வர்கள், முதியவர்கள் இந்த ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நோயாளி கள் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தாமதமாக செல்லக்கூடிய நிலைமை இருக்கிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டை கருதி சாலையை கடப்பதற்கு அந்த ரயில்வே கேட்டை அப்புறப்படுத்தி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைத்து பொது மக்களுக்கு வழி அமைத்து தர வேண்டும்.

மேலும், பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை (NH 45) கடப்பதற்கு மேம்பாலம் அமைத்து தரவேண்டும், ரயில்வே நிலையம் அருகில் நகரும் படிக்கட்டு அமைத்துத்தரவேண்டும், ஜிஎஸ்டி சாலை கடப்பதற்கும், 8 வழி சாலை யாக மாறிய பின்பு விபத்துக்களை தவிர்க்க வும், சிக்னல் தானியங்கி முறையில் இயங்குமாறு அமைத்து தர வேண்டும், மக்கள் இரவு நேரங்களில் ரயில்வே நிலையத்திலிருந்து ரயிலை விட்டு பாது காப்புவுடன் வீடு செல்ல ரயில்வே காவ லர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்,  

ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில் கிளைச் செயலாளர் எம்.வெங்கடேசன் தலை மையில் இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் ஒன்றிய செயலாளர் கே.சேஷாத்திரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.தமிழரசி, எஸ்.குணசேகரன், பகுதி குழு உறுப்பினர்கள் பாபு, சம்பத், செல்வராஜ், நடராஜன், மகேஸ்வரி உள்ளிட்ட பலர் பேசினர்.