மதுராந்தகம்,ஜன. 25- மதுராந்தகம் அருகே மருவளம் கிராமத்திற்கு புதிதாக பகுதி நேர நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜமீன் எண்டத்தூர் ஊராட்சியில் ஒழவெட்டி, மருவளம் ஆகிய கிராமங் கள் உள்ளன. இதில் மரு வலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். சுமார் 130 குடும்ப அட்டைகள் உள்ளது. இவர்களுக்கான நியாய விலை கடை ஒழவெட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலை கடை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தால், நியாய விலை கடைக்கு சென்று அரிசி உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து வரும் நிலை உள்ளது. இதனால் முதியோர், பெண்கள், ஊனமுற்றோர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஒழவெட்டி கிராமத்தில் செயல்படும் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் ரேசன் பொருட்களை வாரத்தில் ஒரு நாள் மருவளம் கிராமத்திற்கு கொண்டுசென்று விநி யோகம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி கள் நியாய விலை கடைக்கு சொந்த கட்டடம் கட்டிக்கொடுக்க இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பொதுவான இடத்தில் ரேசன் கடையை கட்டி கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மருவளம் கிளைச் செயலாளர் ஜெகன்னாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலருக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், மருவளம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடை அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.