districts

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு காவலர் மீது வழக்குப் பதிவு

செங்கல்பட்டு, ஜன.6-  செங்கல்பட்டு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் பலியான சம்ப வத்தில் விபத்துக்கு காரணமான காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது  தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவருடைய மகன் செந்தில் வயது 40. இவருக்கு திருமணம் ஆகி பத்து வயதில் ஒரு மகனும், எட்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செங்கல்பட்டு அடுத்துள்ள திம்மாவரம் பகுதியில் வசித்து வருகிறார் இந்த நிலையில் வியாழனன்று செந்தில் வழக்கம் போல மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு வேலையை முடித்துவிட்டு, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான கண்ணன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மறைமலை நகரில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது செங்கல்பட்டு காஞ்சிபுரம் பிரதான சாலையில் திம்மா வரம் என்ற பகுதியில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது, எதிரே வந்த இருசக்கர வாகனம் அவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டசெந்தில் வெள்ளியன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த விபத்து தொடர்பாக, செங்கல் கட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் எதிரே வாகனத்தை ஒட்டி வந்தது வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் எழிலரசன் என்பது விசாரணையில் தெரியவந்தது.  இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்று கையிட்டு சம்பந்தப்பட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செங்கல்பட்டு தாலுக்கா காவல் ஆய்வாளர் அசோகன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உத்திரவாதம் அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட காவலர் மீது, செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.