districts

img

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

செங்கல்பட்டு, நவ. 28- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகம் கட்டிட பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட பேரவை மாவட்ட தலைவர் கே. பூங்குழலி தலைமையில் சித்தாமூரில் நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலை வர்டி.கன்னியப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், வட்டத் தலைவர் டி.விஸ்வ நாதன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலை வர் மு.செல்வராணி துவக்கிவைத்து பேசி னார்.மாவட்ட செயலாளர் சி.முகமது உசேன் வேலை அறிக்கையும், பொரு ளாளர் வி.விக்டர் சுரேஷ் வரவு,செலவு அறிக்கையை சமர்பித்தனர். இதில் கே.வி.வேதகிரி(ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் சங்கம்), எஸ்.பரணி (ஊரகவளர்ச்சித்துறைஅலுவலர்கள்சங்கம்), எம்.சீனு வசன்(ஆரம்பப்பள்ளிஆசிரியர்கூட்டண), சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் கே.பாபு, வி.லெனின்(கருவூல கணக்கா ளர்கள் சங்கம்) ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பேரவையை நிறைவு செய்து சங்கத்தின் மாநில துணை பொதுச் செய லாளர் தெ.வாசுகி பேசினார். வட்ட இணை செயலாளர் எம்.ராமு நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
ஊராட்சி செயலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள், பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். செய்யூர் வட்டத்தை இரண்டாக பிரித்து செய்யூர் மற்றும் பவுஞ்சூர் உள்ளடக்கிய ஒரு வட்டமாகவும் சித்தாமூர் மற்றும் மேல்மருவத்தூர் உள்ளடக்கி மற்றொரு வட்டமாகவும் பிரிக்க வேண்டும்,  செங்கல்பட்டு நகரம் முழுவதும் பாதாள சாக்கடை  அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.