செங்கல்பட்டு,மே 11- செங்கல்பட்டில் தற்போது உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்து கள் வந்து செல்லவும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை யடுத்து புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து செங்கல் பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சி வெண்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்திற்கு 10 ஏக்கர் நிலம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதில் பேருந்து நிலையம் 5 ஏக்கரிலும், பணிமனைக்கு 5 ஏக்கரும் ஒதுக்கப்பட்டு உள்ளன. விரைவில் இதற் கான பணிகள் தொடங்க இருக்கிறது. பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப் பட்டு உள்ள இடம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமானது ஆகும். இந்த இடத்தில் உள்ள நேதாஜி நகரில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி சுமார் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து 40 குடும் பத்தினரையும் அப்புறப் படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதற்கு முன்பும் இதே போல் இடத்தை காலி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்து நாங்கள் தப்பித்தோம். இதையடுத்து நாங்கள் எங்களிடம் உள்ள பணத்தை வைத்து வீடு கட்டி உள்ளோம். இப்போது இடத்தை காலி செய்யுமாறு கூறுகிறார்கள். நாங்கள் எங்கே செல்வோம் என்ற னர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கூறும்போது, 1960ம் ஆண்டு மருத்துவகல்லூரிக்காக தொழில் அதிபர் ஒருவர் 300 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்து இருந்தார். அந்த இடத்தில் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அவர்க ளுக்கு பட்டா கிடையாது. புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு உள் ளது. அந்த இடத்தில் ஆக்கிரமித்து வசிப்பவர்க ளுக்கு இடத்தை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி உள்ளோம் என்று கூறினார்.