செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கூடுவாஞ்சேரி ஏரி மற்றும் ஊரப்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி ஏரி, ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரண்டு ஏரிகளிலும் இருந்து , தண்ணீர் வெளியேறுவதால் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர், சிவா அவென்யூ , சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் இருக்கும் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கால்வாய்களில் செல்ல வேண்டிய நீர் நிரம்பி சாலையில் வழிந்தோடி , குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.