செங்கல்பட்டு, ஏப் 13 – மாமல்லபுரத்தில் ஜூலை மாதம் துவங்க இருக்கும் சர்வதேச பிடே சதுரங்க போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சர்வதேச பிடே சதுரங்க போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 186 நாடுகளில் இருந்து 2000 க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில் அலுவலகம் மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தங்கும் விடுதியில் செவ்வா யன்று (ஏப்ரல் 12) சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: 44-வது சர்வதேச சதுரங்க பிடே சாம்பியன்ஷிப் 2022 போட்டி மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி முதல் ஆக. 10 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இப்போட்டியில் ஏறத்தாழ 186 நாடுகளில் இருந்து 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு அரசு செயலாளர் தலைமையில் சென்னை சதுரங்க ஒலிம்பியாடு கமிட்டி என்ற சிறப்பு சங்கம் உருவாக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ள வசதியாக பன்னாட்டு சதுரங்க கூட்ட மைப்பு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பின் நிர்வாக அலுவலகம் மாமல் லபுரம் ,கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதி முதல் தளத்தில் அமைக்கப்பட் டுள்ளது முதற்கட்டமாக இப்பணி களை மேற்கொள்ள தமிழக அரசு ரூபாய் 40 கோடி ஒதுக் கியுள்ளது. மேலும் மாமல் லபுரம் பகுதியில் விளையாட்டு வீரர்களை தங்க வைக்க 2600 அறைகள் பல்வேறு தங்கும் விடுதிக ளில் ஏற்படுகள் செய்யப் பட்டுள்ளது. போட்டிகள் நடத்துவதற்கான இடங் களை ஆய்வு செய்து வரு கிறோம். தமிழக பண் பாட்டை உணரத்துவம் விதமாக வீரர்களை வர வேற்க அனைத்து எற்படுக ளும் செய்யப்பட்டு வருகின் றது. இவ்வாறு அவர் கூறி னார். இந்நிகழ்ச்சியில், தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர். இரா. ஆனந்தகுமார், இந்திய சதுரங்க கூட்டமைப்பு செய லாளர் மற்றும் ஒலிம்யியாட் இயக்குநர் பாரத்சிங் சவு கான், உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.