districts

img

செங்கல்பட்டில் ஜமாபந்தி துவக்கம்

செங்கல்பட்டு, ஜூன் 12- செங்கல்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433–ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் புதனன்று நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் செங்கல்பட்டு வட்டங்களில் உள்ள கிராம மக்களிடமிருந்து 145 மனுக்கள் பெறப்பட்டது.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் முயற்சியாலும் பெரு நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதி மூலம் ஒரு மாற்றுத்திறனாளி பயனாளிக்கு செயற்கை கால், மற்றும் 2 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகளும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.