districts

img

மதுராந்தகம் அருகே கோர விபத்து, சம்பவ இடத்திலேயே 6 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில், சென்னையை நோக்கி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி சென்று கொண்டிருந்தது. இதில் வாகனத்தில்,  15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.  இந்த டாட்டா ஏசி வாகனம் திடீரென  ஜானகிபுரம் பகுதியில் முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி  மீது மோதியுள்ளது.

இதனால் டாட்டா ஏசி வாகனம் விபத்தால் நிலை குனிந்து உள்ளது. தொடர்ந்து டாட்டா ஏசி வாகனத்திற்கு பின்னால், வந்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, டாட்டா ஏசி மீது மோதி உள்ளது. இரண்டு வாகனங்களுக்கு இடையே சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் டாட்டா ஏசியில் பயணித்த, ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு சென்று டாட்டா ஏசியில் திரும்பிய பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;