districts

img

இருளர் மக்கள் பயிர் செய்யும் நிலத்திற்கு பட்டா வழங்கிடுக !

செங்கல்பட்டு, ஜூன் 24- செங்கல்பட்டு மாவட்டம், பூதூர் கிராமத்தில் இருளர் இன மக்கள் பயிர் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்கட்கிழமை (ஜூன் 24) மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.  

இம் மாவட்டத்தில் மதுராந்தகம் வட்டம், பூதூர் கிராமத்தில் இருளர் இன மக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு  மேலாக விவசாயம் செய்து வருகிறார் கள். இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நீண்ட கால மாக பல கட்ட போராட்டங்கள் நடை பெற்றன.

இம்மக்கள் விவசாயம் செய்யும் நிலத்திற்கு அருகில் உள்ள  மற்ற சமூகத்தினருக்கு பட்டா வழங்கப் பட்டுள்ளது. இருளர் இன மக்களை மட்டும் அலை கழித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட் டம் நடைபெற்றது. போராட்டத்தில் இருளர் பழங்குடி யின ஆண்களும் பெண்களும் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். செங்கல்பட்டு  பழைய மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர்கள் தலைமையில் கோரிக் கைகளை முழங்கியவாறு பேரணியாக சென்றனர்.

அவர்களை காவல்துறை யினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.  காவல்துறையின் அடக்கு முறையை யும் மீறி ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்ற மலைவாழ் மக்கள் சங்கத்தினர் அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பழங்குடி இருளர் மக்கள் பயிர்செய்துவரும் அனுபவ நிலங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணை யம் வழங்கியுள்ள உத்தரவின் அடிப் படையில், முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மக்களுக்கு கட்டப் படும் பசுமை வீடுகளுக்கு வழங்கப் படும் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி 600 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டுவதற்கு உத்தரவிட வேண்டும், கட்டிகொடுக்கும் வீடுகள் தரமானதாக இருக்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை பாதி யிலேயே நிறுத்தக் கூடாது, பாதியில் நிறுத்தப்பட்ட வீடுகளை முழுமையாக கட்டி முடித்து பயனாளிகளிடம் வழங்க  வேண்டும். பூஞ்சேரி -மாசிமா நகர், வாயலூர்-காரைதிட்டு, மணமை, நெம்மேலி, செய்யூர் ஆகிய கிராமங் களில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு களுக்கு தனிநபர் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என போராட் டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலு வலர் ஆகியோர் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) பூதூர் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு உரிய நட வடிக்கை எடுக்கப்படும். பட்டா கேட்டு  விண்ணப்பித்துள்ள இருளர் மக்களுக்கு உடனடியாக ஆய்வு செய்து பட்டா மற்றும் மாற்று இடம் வழங்கிட நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தனர். மேலும் வடபட்டினம் செங்காட்டூர் ஆகிய பகுதிகளில் இருளர் இன மக்களு க்காக கட்டப்பட்டு வரும் தரமற்ற வீடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதிய ளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப் பட்டது.

மாவட்டத் தலைவர் எம்.அழகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிறுவன தலைவருமான பெ.சண்முகம், மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் ஜி. மோகன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சி பன்னீர், பொருளாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சின்னை யன், ஜெயந்தி, வசந்தா, மல்லிகா, ராமு,  கார்த்திக் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்

இருளர் மக்கள் வசிக்கும் கிராமம் தோறும் முகாம் நடத்தி ஆன்லைன் சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சாதிச்சான்றுகளுக்கு அரசே ஆன்லைன் மூலம் புதிய சான்று வழங்க வேண்டும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பழங்குடியினர் பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், படித்தபழங்குடி இருளர் மக்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

 தமிழக முதலமைச்சரின் அரசாணையின்படி பழங்குடி இருளர், நரிக்குறவர் இன மக்களை முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசிக்க
இருப்பிடமின்றி வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கி வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

இருளர் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கி மறுகுடியமர்வு செய்துள்ள கிராமங்களில் குடித்தண்ணீர், மின்விளக்கு, சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். மனைப்பட்டா பெற்றுள்ள பழங்குடி இருளர் மக்களுக்கு பழங்குடி நலத்துறை மூலம் வீடுகள் ஒதுக்கி கட்டிகொடுக்க வேண்டும், தாட்கோ மூலம் எளிதாக கடன் பெற வழிவகைசெய்ய வேண்டும். 

மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இலத்தூர் ஒன்றியம் வடபட்டினம் கிராமத்தில் தரம் குறைவாக பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகளை இடித்துத்தள்ள உத்தரவிட வேண்டும்.

மதுராந்தகம் வட்டம் அருங்குணம், வீராணக்குண்ணம்,காவாதூர்,பூதூர், ஜமீன் எண்டத்தூர், சாத்தமை, புதுபட்டு,மேலவலம்பேட்டை, வேடவாக்கம், மதூர், தொழுப்பேடு, கன்னிக்கோயில்மேடு, அச்சரப்பாக்கம், புலிப்புரக்கோயில், எல்.என்.புரம்,சிறுகளத்தூர், செய்யூர் வட்டம் செய்யூர், செங்காட்டூர்,வெடால்,இல்லீடு, சித்தாமூர் வால்காடு, திருக்கழுக்குன்றம் வட்டம், புலிக்குன்றம், கொத்திமங்கலம், நாவலுர், களத்தூர், காரைத்திட்டு, நல்லூர்,பட்டிபுலம், தையூர்,சிறுகுன்றம். செங்கல்பட்டு வட்டம்,மறைமலைநகர் நின்னகாட்டூர் உள்ளிட்ட கிராமங்களில்உள்ள இருளர் இனமக்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும்.