districts

img

சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நாவின் ஆதரவு தின ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஜூன் 27- காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டி யக்கம் சார்பில் சித்ரவதைக்கு எதிரான தடுப்புச் சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலை அருகில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமதுரபிக், ம.பா.நந்தன் ஆகியோர் தலைமையில், சிபிஎம் செங்கல்பட்டு மாவட்டச்செயலாளர் ப.சு.பாரதி அண்ணா துவக்கி வைத்தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் எ.ராஜ்குமார், தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது யூனிஸ், ததீஒமு மாவட்டச் செயலாளர் க.புரு சோத்தமன், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், சிபிஐஎம்எல்- மு.தினேஷ்குமார், ததீஒமு மாவட்ட துணைத்தலைவர் வல்லம் எம்.ரவி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர்.க.ஜெயந்தி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர்.இரா.சதீஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர்.மு.தமிழ்பாரதி, இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர். சேகுவேராதாஸ், மதுராந்தகம் வழக்கறிஞர்கள் சங்க துணைச்செயலாளர் செந்தமிழன், தமுஎகச மாவட்ட இணைச் செயலாளர் மு.முனிச்செல்வம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.