செங்கல்பட்டு, ஜன. 31- குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வாழும் வீட்டை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர்வட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின்தங்கிய வகுப்பான வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த நந்தகுமார் (த/பெ எம்.வேணுகோபால்) வயது - 42 அவருடைய மனைவி, சுலோச்சனா. ஒரு மகன் ஒரு மகளுடன் வாழ்ந்து வரு கின்றனர். நந்தகுமார் கூவத்தூரில் சலவை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரையும், இவர் குடும்பத்தை சார்ந்த வர்களையும், குலத் தொழிலை செய்யாமல் ஏன் வேறு இடத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்து கிறீர்கள் என கிராமத்தை சேர்ந்த ஒருபகுதியினர் அவ ரையும் அவர் குடும் பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்குவதாகவும், கோயில்களில் அனுமதிப்ப தில்லை எனவும் நந்த குமார் கூறினார். மேலும் கிராமத்தை சார்ந்த ஆதிக்க சாதியினர் சாதிய தியாகவும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியும், வன்மமாக பேசியதாகவும் அவர் தெரிவித்தார். கடந்தமாதம் 24ஆம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய நந்தகுமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டை சாதி ஆதிக்க சக்தி கள் தீவைத்து கொளுத்தினர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நந்த குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் கூவத்தூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். கூவத்தூர் காவல் துறை யும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத னால் இந்த குடும்பம் பெரும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நந்தகுமாரின் குடும்பத்தினரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செய லாளர் க.புருசோத்தமன், மாவட்ட பொருளாளர் அ.ராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் க.தன சேகரன், செய்யூர் வட்ட செயலாளர் கோவிந்தசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ச.ஜீவானந்தம், பொருளாளர் வழக்கறிஞர் அசோக், தமுஎகச நிர்வாகி எம்.அய்யப்பன், மார்க்சி ஸ்ட் கட்சியின் செய்யூர் வட்ட குழு உறுப்பினர்கள் ரா.ராஜேந்திரன், க.வரத ராஜன் ஆகியோர் சந்தித்திப்பேசினர். இதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் சார்பில் மாவட்ட செயலாளர் க.புரு சோத்தமன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், நந்தகுமாரை யும் அவரது குடும்பத்தி னரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திடவும் நந்த குமார் குடும்பத்தினர் கிராமத்தில் சுதந்திரமாக வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.