districts

img

தரைப்பாலத்தில் வெள்ளம்: போக்குவரத்து துண்டிப்பால் மக்கள் அவதி

செங்கல்பட்டு,  நவ. 3- செங்கல்பட்டு அருகே தரைபாலத்தில்  வெள்ள நீர் செல்வதால் கிராமத்திற்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட் டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப் பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10 க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி களைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும் செங்கல்பட்டு, சிங்கப்பெரு மாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை மற்றும் இதர பணிகளுக்கு சென்று வருகின்றனர். குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில் தரைப் பாலங்கள் உள்ளன.  இதில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், தென்னேரி ஏரி நிரம்பி வருகிறது.  இதனால்  ஏரியில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படுகிறது. இதன் காரணமாக  குருவன்மேடு, ரெட்டிபாளையம் ஆகிய தரைப்பாலங்கள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளன. இதனால்  குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிக ளுக்கு வரும் பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்வோரும்  அவதிப்படு கின்றனர். சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 5 முதல் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரகடம்,  பாலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று சுற்றிக்  கொண்டு செங்கல்பட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்குப் பின் இந்த சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.