districts

img

காட்டு பன்றிகளை பிடிக்க விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு, ஜன 19- விவசாய நிலங்களை சீரழிக்கும் காட்டு  பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட நிர்வாகம்  உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் நலன்  காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வியாழனன்று (ஜன.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த  விவசாயிகள் கலந்துகொண்ட தங்களது குறைகளை முறையிட்டனர். விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தர விட வேண்டும், விவசாய நிலங்களில் கேட்பாரற்று சுற்றித் திரியும் கால்நடை களை கட்டுப்படுத்த வேண்டும், யூரியா தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும், விவசாய நிலங்களுக்கு இடையூராக செயல்பட்டுவரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், பிப்ரவரி  முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும்  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங் களை துவக்க வேண்டும், விவசாய நிலங்க ளில் தாழ்வாக செல்லும் மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும், விவசாயிகள் நலன்  காக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அரசு அலு வலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படுவதுடன் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், விவசா யத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.