மதுராந்தகம், பிப்.24- ஒரங்காவலி கிராமத்தில் விவசாயத்தை பாதிக்கும் கல் குவாரிகளை மூட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஓணம்பாக்கம் குறு வட்டத்திற் குட்பட்ட கீழ்வாசலை வருவாய் கிராமம் 192 ஒரங்காவலி கிராமத்தில் புல எண் 121/3ல் 5.79 ஏக்கர் விவசாய நிலத்தில் நிலத்தடியில் மண்ணை வாரி விட்டு கருங்கல்லை உடைக்க தனி நபர் ஒருவருக்கு உரிமம் வழங்கியி ருப்பதாக கூறி சுரங்கம் வெட்டும் பணி துவங் கப்பட்டு நடைபெற்று வருகிறது. விவசாய நிலம், ஏரி, குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் தற்போது சுரங்கம் வெட்டும் பணி நடை பெற்று வருவதால் விவசாயம், குடிதண்ணீர் தட்டுப்பாடு சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம பொது மக்கள் சார்பில் கல்குவாரி அமைக்கவும் சுரங்கம் வெட்டவும் எதிர்ப்பு தெரிவித்து கல்கு வாரியை முற்றுகையிட்டனர். இப்போராட் டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர் .இதனைத் தொடர்ந்து வியாழனன்று (பிப் 24) தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கல்குவாரியை தடைசெய்ய வலியுறுத்தி மதுராந்தகம் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மது ராந்தகம் வட்டச் செயலாளர் அர்ஜூன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, மாவட்ட செயலாளார் ஜி.மோகனன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசுதேவன், சிபிஎம் முன்னாள் மாவட்ட செயலாளார் டி.கிருஷ்ணராஜ், கிராம நிர்வா கிகள் அபிபெரியார், சண்முகம், விக்னேஷ் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்கத் தின் நிர்வாகிகள் மதுராந்தகம் கோட்டாட் சியரை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கினர்.