districts

img

குடும்ப ஓய்வூதியம் 50 விழுக்காடு உயர்த்த வலியுறுத்தல்

செங்கல்பட்டு,ஜூலை 16 - குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் செங்கல் பட்டு மாவட்ட 2ஆவது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 16) செங்கல்பட்டில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.வி.வேத கிரி தலைமை தாங்கி னார். மாநில செயற் குழு உறுப்பினர் வெ. பொன்னுசாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் துணைத் தலை வர் எஸ்.ரவிச்சந்திரன் வர வேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முகமது உசேன் பேசி னார். மாவட்டச் செயலாளர் ப.பன்னீர் செல்வம் வேலை அறிக்கையும், பொருளாளர் ஜெ.செல்வன் வரவு -செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத் தலைவர் எஸ். பரணி, சாலை போக்கு வரத்து சங்க மாவட்டத் தலை வர் கதிர்வேலு, அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் விக்டர் சுரேஷ்குமார், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் என்.அருணாசலம் உள்ளிட் டோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் எஸ். ஆறுமுகம் நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஞான சூரியன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
தேர்தல் கால வாக்குறுதி யின் படி பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல் டுபத்த வேண்டும், சத்து ணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், வனக் காவலர்கள், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்டோருக்க குறைந்தபட்ச ஓய்திவூ யம் 7850 ரூபாய் வழங்க வேண்டும்,7வது ஊதியக்குழு பரிந்துரை யின் படி 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.வி.வேதகிரி, செயலாளராக பி.பன்னீர்செல்வம், பொருளாளராக ஜெ.செல்வன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.