districts

ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

செங்கல்பட்டு, மார்ச் 9- செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சித்த  வட மாநில சிறுவன் கைது செய்யப்பட் டுள்ளான். செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் மனுவில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் உள்ள புகைப்படத்தை எடுத்து யாரோ மர்ம நபர் போலியான கணக்கு தொடங்கி தன்னுடைய நண்பர் களிடம் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் சம்பந்தப் பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் 16 வயது  சிறுவனை கைது செய்து செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.