districts

img

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு கூட்டுறவுத்துறை  பதிவாளர் அலுவலக  ஊழியர்களை தரக்குறைவாகவும் கண்ணியமற்ற முறையில் பேசி, மாதாந்திர ஊதிய பட்டியலில் கையொப்பம் இடாமல் அடாவடித்தனம் செய்யும் துணைப்பதிவாளர் மு. உமா தேவியை பணிநீக்கம் செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு தீபன் சக்கரவர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், நிர்வாகிகள் சிவக்குமார், சே. முரளி, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் சு .பார்த்திபன், கி. பிரபாகரன் ஆகியோர் பேசினர்.