செங்கல்பட்டு, ஜூன் 21- கல்பாக்கத்தில் செயல்பட்டுவரும் மேப்ஸ், ஐஜிகார், உள்ளிட்ட பல்வேறு நிறுவ னங்களில் பணிசெய்திடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட் செயலாளர் க.பகத்சிங்தாஸ், கிங்காஸ் தங்கத்தின் செயல்தலைவர் க.பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல் நாத்திடம் கொடுத்துள்ள மனுவில் கல்பாக்கத் தில் செயல்பட்டுவரும் மேப்ஸ், ஐஜிகார், பிஏஆர்சிஎப், பாவினி, ஜிஎஸ்ஓ உள்ளிட்ட அணுசக்தி துறைசார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், போனஸ், வருங்கால வைப்பு நிதி போன்ற சட்ட உரிமைகள் மறுக்கப்படுவதோடு சட்ட விரோதமான பணி நீக்கலுக்கும் உள்ளாகி கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இத்தைகைய சுரண்டலிலிருந்து விடுபடு வதற்காக தொழிலாளர்கள் முயற்சிக்கும் போது சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மீண்டும் வேலை வழங்க கோரி ஒன்றிய துணை தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தலையும் செயல்படுத்த ஒப்பந்ததாரர்களும் முதன்மை நிர்வாகமும் முன்வருதில்லை.
காலம் கடத்துவதன் மூலம் ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டினிக்கும் பழிவாங்குதலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் இந்நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை களுக்கு ஆதரவாக புதுப்பட்டினம், சதுரங்கப் பட்டினம், வாயலூர், விட்டிலாபுரம், சூரா டிமங்கலம் உள்ளிட்ட கல்பாக்கம் சுற்றுப்புற கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய துணைதொழிலாளர்ஆணையர் அறிவுறுத்தியும் வேலை மறுக்கப்பட்டுள்ள ஜிஎஸ்ஓ வில் சட்டவிரோதமாக் வேலை நீக்கம் செய்யப்பட்ட 8 பம்பு ஆப்பரேடர்க ளுக்கும் மற்றும் மேப்ஸ் விருந்தினர் மாளிகை யில் வேலை நீக்கம் செய்யப்பட்ட 8 பெண் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகள் மூலம் கல்பாக்கம் சுற்றுப்புற கிராம இளைஞர்களும் ஒப்பந்த தொழிலாளர்களும் பெரும் பயன் அடைவதோடு கல்பாக்கம் அணுசக்தி துறை சார்ந்த நிறுவனங்களில் தொழில் அமைதியும் தொழில் உறவும் மேம்பட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மேம்பட வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.