districts

img

தோழர் தி.ரவீந்திரன் படத்திறப்பு

மதுராந்தகம், பிப். 24- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்த கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்பணியாளர் தோழர் ரவீந்திரன் படத் திறப்பு விழா புதனன்று (பிப் 24) நடை பெற்றது.  தோழர் டி.ரவீந்தரன் (வயது46) இளம் வயதில் இந்திய மாணவர் சங்கத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர், மதுராந்தகம் வட்டக்குழு உறுப்பினர், செங்கல்பட்டு மாவட்ட முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட  மக்கள் பணி செய்தவர். அண்மையில்  உடல்நலக்குறை வால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி அன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருந்துயரை ஏற்படுத்திய ரவீந்தி ரனின் படத்திறப்பு நிகழ்வு மார்க்சிஸ்ட் கட்சியின்  மதுராந்தகம் நகர கிளையின் சார்பில் புதனன்று (பிப் 23) வி.தயாளன் தலை மையில்  நடைபெற்றது. தோழர் ரவீந்தி ரன் படத்தை திறந்து வைத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன், க.புருஷோத்தமன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, அர்ஜூன் குமார், தமிழ்பாரதி, கலையரசி,  மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, முறைசாரா சங்க நிர்வாகிகள் இ.ராம மூர்த்தி, டி.பாபு   உள்ளிட்ட பலர் அவரை நினைவு கூர்ந்து பேசினர். நகர செயலாளர் துளசி நன்றி கூறினார். முன்னதாக மது ராந்தகம் நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில்  ரவீந்திரன் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டது.