districts

இரவு நேரங்களில் ஏடிஎம் மையம் முடப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பு

செங்கல்பட்டு, மார்.8- இந்தியன் வங்கி ஏடிஎம்  மையங்கள் இரவு நேரங்க ளில் மூடப்படுவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் நகரில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வங்கி  வளாகத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. வங்கி நேரம் முடிந்தவுடன்  இந்த ஏடிஎம் மையமும் முடப்படுகிறது.  இதனால்  இரவு நேரங்களில் இந்த ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன் அருகில் உள்ள வேறு சில வங்கிக ளுக்கு உரிமையான ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க  வேண்டிய சூழல் உள்ளது.  தற்போது ஐந்து முறைக ளுக்கு மேல் ஏடிஎம் பரிவர்த் தனை செய்தால் சேவை கட்டணம் பிடிக்கும் வங்கி நிர்வாகங்கள் மாற்று ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கும் சேவை கட்டணம் பிடிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து இந்தியன் வங்கி வாடிக்கை யாளர்களிடம் கேட்டபோது, கடந்த பல நாட்களாக  ஏடிஎம் மையம் மாலையில்  முடப்படுகிறது. மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளிலும் இதே  நிலைதான் நீடிக்கின் றது. மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.