செங்கல்பட்டு, பிப். 25- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முயற்சியால் ஐதராபாத்தில் செயல் பட்டுவரும் ஐசிஎஆர் கோழி ஆராய்ச்சி மையத் துடன் இணைந்து 100 தலித் குடும்பங்களுக்கு கோழிக் கூண்டுகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத் தில் ஒன்றிய அரசின் ஐசிஎ ஆர் கோழி ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் இணைந்து வள்ளுவப்பாக்கம் கிராமத் தில் 50 தலித் குடும்பங்க ளுக்கும், சித்தாமூர் ஒன்றி யம் கயநல்லூர் கிராமத்தில் 50 தலித் குடும்பங்களுக்கும் ரூபாய் 7ஆயிரம் மதிப்புள்ள கோழி கூண்டுகள் வழங்கப் பட்டன. மேலும் வருகின்ற மே மாதம் கூண்டுகளில் வளர்ப்ப தற்கு கோழிகளும், தீவனங்க ளும் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் ஜி.மோகனன் தலைமை யில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோழி ஆரா ய்ச்சி மைய விஞ்ஞானிகள் மருத்துவர்கள் சண்முகம், கண்ணன், விஜயகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு கோழி வளர்ப்பின் முக்கியத் துவம் குறித்து விளக்கி பேசி னார். விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜா, நிர்வாகிகள் ராஜேந்திரன், மகேந்திரம், ஜம்புலிங்கம், அனுசுயா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.