செங்கல்பட்டு, நவ.,25 எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வடசென்னை என்ற நூலுக்காக நிவேதிதா லூயிஸ்க்கும், பாரதியார் கவிதை விருது வேட்டுவம் நூறு நூலுக்காக மௌனன் யாத்ரிக்காவுக்கும் அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது உதை பந்து எழுதிய ஏ.ஆர். முருகேசன் மற்றும் மலைப்பூ நூலுக்கு விழியன் ஆகியோருக்கு எஸ்.ஆர்.எம் நிறுவனர் பாரிவேந்தர், காந்திய நெறியாளர் தமிழருவி மணியன் ஆகியோர் இணைந்து வழங்கினர். ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது யாதும் ஊரே என்ற நூலுக்காக சித்தார்த்தனுக்கு, அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது தமிழர் மருத்துவம் குறித்து எழுதிய சிவகடாட்சம் என்பவருக்கும் பரிதிமாற் விருதை தமிழ் ஆய்வறிஞர் விருது கவிதை மரபும் தொல்காப்பியமும் என்ற நூலுக்காக குருநாதன் என்பவருக்கு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார் என்ற நூலுக்காக கருகூர் கன்னல் என்பவருக்கும், உலகத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் விருது குடந்தை பாலு என்பவருக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது மணல் வீடு என்ற நூலுக்காக அரிகிருஷ்ணன் என்பவருக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது புதுவை தமிழ்ச் சங்கம் முத்துவுக்கும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது. இதில், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது பெற்றவருக்கு 3 லட்சம் ரூபாய், மற்ற படைப்பாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய், தொல்காப்பியம், சுதேசமித்திரன் விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 11 லட்சம் ரூபாய் விருதுகள் வழங்கப்பட்டது.