செங்கல்பட்டு,அக்.29- காஞ்சிபுரம், அங்காளம் மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரஹ்மான் (வயது 25). இவர் கடந்த 2014 -ம் ஆண்டு பால் வாங்க கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை வழிமறித்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று சிறுமியிடம் பாலி யல் சீண்டலில் ஈடுபட்டுள் ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத் திற்கு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர் சிறு மியை மீட்டனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.